தற்போது உலகை அச்சுறுத்திவரும் கொரோனா குறிப்பாக வயது முதிர்ந்தவர்களையே அதிகளவில் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளதாவது வயது முதிர்ந்தவர்களையே கொரோனா தொற்று அதிகளவில் பாதிக்கின்றது. எனவே அவர்களை பாதுகாக்க விசேட பாதுகாப்பு செயற்றிட்டமொன்று உருவாக்கப்படுவது அவசியம். நாட்டின் மிகமுக்கியமான பிரிவினருக்கு சேவையாற்றுகின்ற கட்டமைப்புகளாக சமூகசேவைத் திணைக்களமும் முதியோர் செயலகமும் விளங்குகின்றன. எனவே முதியோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
