பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவின் தலைமையில் கடந்த 2020.11.27 அன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கள அலுவலர்களுக்கு புதிய மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டம் மீண்டும் செயற்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் 31.01.2014 க்குப் பிறகு நியமனங்களைப் பெற்று நிரந்தரமாக 05 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த கிராம சேவகர்கள் உள்ளிட்ட கள அலுவலர்களுக்கு இத் திட்டத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
