முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான 23 வயதுடைய தாய் ஒருவருக்கு ஆரோக்கியமான நிலையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததன் காரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சை முறைப்படி பிரசவம் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 170 கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமானவர்கள் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
