கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளையதினம் மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்தது போல், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாளைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார். இரண்டாம் தரம் முதல் 13ஆம் தரம் வரையிலான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் இது குறித்த சுகாதார பரிந்துரைகள் அனைத்தும் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
