பொலநறுவையில் உள்ள கொரோனோ சிகிச்சை நிலையத்திற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 20 தாதியர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். கொரோனோ பெருந்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக கொரோனோ சிகிச்சை நிலையங்களில் நோயாளர்கள் நிரம்பி உள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சை நிலையங்களில் தாதியர் பற்றாகுறை நிலவுகின்றன. அதனால் கூடுதல் தாதியர்களை கடமைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 4 தமிழ் தாதியர்கள் உட்பட 20 தாதியர்கள் பொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
