இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 2,300 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி அவற்றில் 51 வீதமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்காமை மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பெருமளவிலான குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
