மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை குடும்ப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
